Breaking News

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

அதிகரித்துவரும் கொரோனாநோயாளர்கள் எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் நாடளாவிய முடக்கல் நிலைக்கான தேவை எழாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் மக்கள்  பாதுகாப்பு நடைமுறைகளை போதியளவு பின்பற்றாத நிலையில் வெளிநாட்டவர்களை குறை சொல்ல முடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இன்றி தடுப்பூசிகள் குறித்து வதந்திகள் வெளியாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.