Breaking News

மும்பையில் 20 மாடி குடியிருப்பு தீவிபத்தில் 7 பேர் பலி...!!!

மும்பையில் 20 மாடி குடியிருப்பு தீவிபத்தில் 7 பேர் பலி...!!!

மும்பையில் 20 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடி குடியிருப்பில் 18 வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 13 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை,இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.