Breaking News

ரயில்களில் மோதுண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு....

ரயில்களில் மோதுண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு....

ரயில்களில் மோதுண்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

நேற்றைய தினத்தில் (18) மூன்று வெவ்வேறு பகுதிகளில் ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.புஸா மற்றும் கிங்தோட்டை ரயில் மார்க்கத்தில், ரயிலில் மோதுண்டு 60 வயதான ஒருவரும்,புத்தளம் முதல் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 71 வயதானவரும்  , ஹபராதுவ − தல்பே − மிஹிரிபெத்த பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளனர் 

மேலும், இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.