Breaking News

இலங்கையில் இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை தீர்மானம்

இலங்கையில் இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை தீர்மானம்

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் 19 தடுப்பூசியினை 10 வாரங்களிலா அல்லது 12 வாரங்களிலா செலுத்துவது என்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு, தொற்று நோய் தடுப்பு பிரிவில் நாளை (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள நிலையில், அது தொடர்பான தீர்மானத்தினை எடுக்கவுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.