Breaking News

நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி - அவருடன் பணியாற்றிய 45 பேருக்கு கொரோனா

நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி - அவருடன் பணியாற்றிய 45 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இன்று காலை போவாய் உள்ள ஹிரானந்தனி மருத்துவமனையில் (Hiranandani hospital) அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அக்ஷய் குமாருடன் ராம் சேது படத்தில் பணியாற்றிய 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 45 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.