Breaking News

இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் திட்டம்!

இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் திட்டம்!

இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நடவடிக்கைக்காக சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை மக்களுக்கான இந்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விசேட நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.