Breaking News

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா

வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 26 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் யாழ்ப்பாணத்தில் 21 பேரும் வவுனியா, முல்லைத்தீவில் தலா 2 பேரும், கிளிநொச்சியில் ஒருவரும் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 29ஆவது சத்திரச்சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பிய கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.