Breaking News

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம் - காரணம் என்ன?

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம் - காரணம்  என்ன?

இந்தியா, திருப்பத்தூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோடைக்காலம் நெருங்குவதால் ஆடுகளுக்கு நோய் வராமல் இருக்க திருப்பத்தூர் அரசு தலைமை கால்நடை மருத்துவமனையில் அவற்றிற்கு தடுப்பூசி போட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடுகளின் உரிமையாளர் கூறுகிறார்.

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் அடுத்தடுத்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த தலைமை கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆடுகளின் உடல்பாகங்களை வெட்டி பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும், அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.