Breaking News

ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் - லொக்டவுன் சாத்தியமா?

ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் - லொக்டவுன் சாத்தியமா?

இலங்கை, யாழ்ப்பாணத்தில் சில இடங்கள் லொக்டவுன் செய்யப்படவுள்ளதாக தெறிகிரிது. யாழ்ப்பாணத்தில் வேகமாக பெருந்தொற்று பரவிவருவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழ். மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.

வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.