Breaking News

இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படும் - இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படும் - இராஜாங்க அமைச்சர்

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (8) முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று வந்தடைந்தன.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 5 ஆயிரத்து 284 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் , இதுவரையில் 7 இலட்சத்து 29 ஆயிரத்து 562 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.