வெலிங்டனுக்கு வடக்கே, மாநில நெடுஞ்சாலை 2ல் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலை 6.30க்குப் பிறகு Kaitoke மற்றும் Featherston இடையே உள்ள Remutaka Hill இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தால் நெடுஞ்சாலையின் இரு பாதைகளும் பல மணி நேரம் மூடப்பட்டன. பின்னர் காலை 11.45 மணிக்கு சாலை திறக்கப்பட்டது.
இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.