Breaking News

திமுக அமைச்சரை 'பொறுக்கி' என சாடிய பிரசாத் ரெட்டி - காரணம் என்ன...??

திமுக அமைச்சரை 'பொறுக்கி' என சாடிய பிரசாத் ரெட்டி - காரணம் என்ன...??

இந்தியா: தமிழ்நாடு

பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி.

இவர் பாஜகவையோ, அண்ணாமலையையோ யாராவது விமர்சித்தால் பாரபட்சம் பார்க்காமல் கடுமையான வார்த்தைகளால் சாடுவது ரெட்டியின் வழக்கம்.

இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தபோது செங்கோலை பார்த்தபடி தரையில் விழுந்து வணங்கினார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு "மூச்சு இருக்கா? மானம் ரோஷம் இருக்கா?" என்று கூறியிருந்தார்.

இதனால் ஆவேசமான பிரசாத் ரெட்டி அமைச்சர் மனோ தங்கராஜை மிக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தி "ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க" என்று கூறினார்.

இந்த ட்வீட் திமுகவினரை கடுப்பேற்றியுள்ளது. அவருக்கு பதிலடி கொடுத்து ட்வீட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தளபதியாகவும், தீவிர விசுவாசியாகவும் காட்டிக்கொள்ளும் அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகிறது.

அண்ணாமலையை சந்திக்க வேண்டுமென்றால் என்றாலும், தனிப்பட்ட விடயங்களுக்காக கோரிக்கை வைக்க வேண்டுமென்றாலும் ரெட்டியின் இடையூறு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

மேலும் இவையெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்தே நடப்பதாகவும் கூறப்படுகிறது.