ஆக்லாந்தின் North Shore பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Albany என்ற இடத்தில் உள்ள குறித்த வீட்டில் இன்று அதிகாலை தீப்பிடித்தை அடுத்து வீட்டின் உள்ளே ஒருவர் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து காலை 6 மணிக்கு முன்னதாக மூன்று தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளே சிக்கியிருந்த நபரை விரைவாக மீட்டனர்.
அவர்கள் வருவதற்குள் தீ பரவியதாகவும், ஆனால் பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு சேவைகள் தெரிவித்தன.