Breaking News

ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...!!

ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்...!!

நடிகர் நடிகைகளின் ட்விட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

தற்போது தன்னுடைய ட்விட்டர் கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"என்னுடைய ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. உண்மையைச் சொன்னால் கடந்த வாரம் மிகவும் அமைதியாக இருந்தது. என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க " என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.