Breaking News

மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்; 3 பேர் பலி - ஆப்பிரிக்காவில் பரவும் புது வைரஸ்...!!

மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்; 3 பேர் பலி - ஆப்பிரிக்காவில் பரவும் புது வைரஸ்...!!

ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அடையாளம் தெரியாத வைரஸ் பரவி வருகிறது.

ஊடக அறிக்கைகளின்படி, நகரின் பாசிரோ பகுதியில் சிலருக்கு மூக்கில் இரத்தக் கசிவை ஏற்படுத்திய இந்த மர்ம வைரஸ் காரணமாக இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர்.

திடீரென காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இது எபோலா மற்றும் மார்பர்க் ஆகிய வைரஸ்களால் நிகழவில்லை என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், ஒரு சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக 
மூன்று பேர் கொண்டு வரப்பட்டதை அடுத்து, சுகாதார அதிகாரிகள் பாசிரோ பகுதியை தனிமைப்படுத்தியுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன‌.