Breaking News

கிறிஸ்ட்சர்ச் புத்தகக் கடையில் கொள்ளை - பொலிஸார் விசாரணை...!!

கிறிஸ்ட்சர்ச் புத்தகக் கடையில் கொள்ளை - பொலிஸார் விசாரணை...!!

கிறிஸ்ட்சர்ச் புறநகர் பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடையில் நேற்று காலை நடந்த கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 11.15 மணியளவில் Saint Martins என்ற இடத்தில் உள்ள Paper Tree என்ற கடைக்குள் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் பணம் கேட்டு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் 600 டொலர்கள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டதாக கடை மேலாளர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறித்த நபர் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.