திருநங்கைகளின் உரிமைகளுக்கு ஆதரவாக கிறிஸ்ட்சர்ச் மற்றும் வெலிங்டனில் இன்று நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம், கோஷம், நடனம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச்சில் பல நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் - பலர் பதாதைகள் மற்றும் வானவில் கொடிகளை ஏந்தியவாறு நினைவுப் பாலம் அருகே கூடியிருந்தனர்.
இதற்கிடையில், இன்று மதியம் வெலிங்டனில் உள்ள சிவிக் சதுக்கத்திற்கு 1000க்கும் மேற்பட்டோர் வந்து திருநங்கைகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.