Breaking News

Tauranga வில் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் - 16 வயது இளைஞன் கைது...!!

Tauranga வில் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் - 16 வயது இளைஞன் கைது...!!

Tauranga வின் Bayfair இல் உள்ள Michael Hill ஜூவல்லர்ஸில் இடம்பெற்ற ஒரு மோசமான கொள்ளை சம்பவத்தை அடுத்து 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி குறித்த நகைக்கடையிவ் மூன்று திருடர்கள் நுழைந்து கண்ணாடி பெட்டிகளை உடைத்து பெருமதி மிக்க பல நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதை துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மைக் வர்ணம் அறிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் Tauranga மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.