ஹமில்டன் கிழக்கில் நேற்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 37 வயது நபர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நேற்றைய தினம் நண்பகலுக்குப் பிறகு Clyde தெருவில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
கத்தியுடன் ஒரு நபர் கடைக்குள் நுழைந்து பணம் கேட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஒரு நபரைக் கைது செய்தனர்.
அவர் மீது கொள்ளை முயற்சி, மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்தது மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.