தங்கையை கர்ப்பமாக்கினார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அண்ணனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அவரின் தாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கருவை அழிக்க முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு மருத்துவமனை பொலிஸார் தகவல் அளித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படை யில் சிறுமியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.