Breaking News

கண்டி-மஹியங்கனை வீதி மீண்டும் திறப்பு

கண்டி-மஹியங்கனை வீதி மீண்டும் திறப்பு

மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று 18 ஆவது வளைவின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் அவ்வீதியில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.