Breaking News

ரஷ்யாக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..!!

ரஷ்யாக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..!!

இலங்கை

ரஷ்யா - உக்ரைன் போருக்காக ஓய்வுபெற்ற  இலங்கை இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்தவொரு தகவலையும் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தகவல் குறித்து 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஓய்வுபெற்ற  இலங்கை இராணுவத்தினரின் கடத்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதிகாரிகள் இம்மாதம் 25ஆம் திகதி குறித்த குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை தூதுக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவ வீரர்ககள் இந்த குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.