Breaking News

இலங்கையில் சவர்க்காரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையில் சவர்க்காரம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கை

இலங்கையில் தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதன் காரணமாக சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் பிற்காலத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக பொருளாளர் திருமதி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,

இந்த நாட்களில் நாங்கள் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகளைப் புகாரளித்துள்ளோம். இதை ஆராய்ந்தபோது ஒரு விஷயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சோப்பைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய விடயம்  இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சோப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குழந்தைகளின் சோப் குறித்து பெற்றோர் அவதானமாயிருக்க வேண்டும் எனவும் பிரியங்கனி சுசங்கிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.