Breaking News

இலங்கையில் மீன்களின் விலைகளில் சடுதியாக ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!!

இலங்கையில் மீன்களின் விலைகளில் சடுதியாக ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!!

இலங்கை சந்தைகளில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பானது நுகர்வோரை மிகவும் பாதித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.