Breaking News

அனைத்து போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல - விருதுநகரில் தோற்ற ராதிகா சரத்குமாரின் பதிவு..!!

அனைத்து போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல - விருதுநகரில் தோற்ற ராதிகா சரத்குமாரின் பதிவு..!!

இந்தியா: தமிழ்நாடு

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் தோல்வி அடைந்தவுடன் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 385256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 380877 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 166271 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்து தோல்வி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தனது கணவர் சரத்குமாருடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பகிர்ந்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர், "அனைத்து போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்கள் போரிட்டவர்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்றன. இந்த வரியை நான் படித்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.