Breaking News

ஆக்லாந்தில் உள்ள போக்குவரத்து மையங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது..!!

ஆக்லாந்தில் உள்ள போக்குவரத்து மையங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கைது..!!

மேற்கு ஆக்லாந்தில் உள்ள போக்குவரத்து மையங்களில் சமீபகாலமாக இடம்பெற்ற மோசமான கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து 10 முதல் 15 வயது வரையிலான பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு அறிக்கையில், Waitematā West இன் பகுதி தடுப்பு மேலாளர் இன்ஸ்பெக்டர் கெல்லி Farrant, New Lynn மற்றும் Henderson இல் உள்ள போக்குவரத்து மையங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்ததாக தெரிவித்தார்.

New Lynn, Henderson, Westgate, சில நேரங்களில் பொது இடங்களிலும், சில நேரங்களில் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக கூரப்படுகிறது.

இந்நிலையில் புலனாய்வு ஊழியர்களும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளை அடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் Waitākere இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் ஆறு பேர் இளைஞர் உதவிக்காகபரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

செய்தி நிருபர் - புகழ்