Breaking News

தென்னிந்திய ரசிகர்கள் ஹிந்தி படங்களை பார்ப்பதில்லை - ஜோதிகா வேதனை..!!

தென்னிந்திய ரசிகர்கள் ஹிந்தி படங்களை பார்ப்பதில்லை - ஜோதிகா வேதனை..!!

திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த மிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பே என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷைத்தான் படம் வெளியானது. அதனையடுத்து ஸ்ரீகாந்த் படம் வெளியானது. அந்தப் படமும் நல்ல வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பாலிவுட்டில் 25 வருடங்களாக எந்த சத்தமும் இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு பாலிவுட்டில் இப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற நான் எதிர்பார்க்கவில்லை. சர்ப்ரைஸாக இருக்கிறது. எனக்கு ஏற்ற மாதிரியான கதை எதுவும் அமையவில்லை என்பதால்தான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன்.

நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். தென்னிந்திய - வட இந்திய ரசிகர்கள் என இந்திய சினிமாவை பிரித்து பார்க்க வேண்டாம். தென்னியாவில் ஹிந்தி படங்களை அதிகமாக பார்க்கமாட்டார்கள். ஆனால் வட இந்தியாவிலோ தென்னிந்திய படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அதேபோல் வட இந்தியாவில் ரஜினிகாந்த் பற்றிய பதிவுகள் சோஷியல் மீடியாவில் நிறைய ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்திய சினிமாவில் இப்படி வித்தியாசங்கள் இருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. வட இந்திய ரசிகர்கள், தென்னிந்திய ரசிகர்கள் என்று பிரியாமல் இந்திய ரசிகர்களாக அனைவரும் இருக்க வேண்டும்" என்றார்.