செவ்வாய்கிழமை இரவு Whanganui இல் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஃபிட்சர்பெட் அவென்யூவில் உள்ள குறித்த் வீட்டில் இரவு 7.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்,
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் விசாரணைகளில் பொலிசாருக்கு உதவினார்.
மேலும் உயிரிழந்த பெண்ணை முறையாக அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்