Breaking News

சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!!

சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு..!!

சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் (2)சென்னையின் பரபரப்பாக   மக்கள் நடமாட்டம் கூடிய   பிரதேசங்களான சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என  அந்தந்த  அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து சென்னைகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்படைத பொலிசார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்துசென்று மெட்டல் டிடெக்டர் மற்றும்மோப்ப நாய் உதவியுடன் சோதனைநடத்தினர்.

எனினும் மிரட்டல் விடுக்கப்பட்ட எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, புரளியைகிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சைபர்க்ரைம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை ஏற்கனவே சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபர்ப்பை ஏற்படுத்திய நிலையில் அது போலி மிரட்டல் என கண்டரியப்பட்டிருந்தது.

இந்நிலையில் ,இதுபோன்ற எந்த மிரட்டல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என சுட்டிக்காட்டி சென்னை காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார்.